
காரடையான் நோன்பு பங்குனி மாதம் கொண்டாடப்படும் நோன்பு பண்டிகை. குறிப்பாக பங்குனி மாதம் பிறக்கும் நேரம் பார்த்து நெய்வேத்தியம் செய்வார்கள். இல்லை என்றால் நல்ல நேரம் பார்த்தும் செய்யலாம்.
என்ன தேவை?
பச்சரிசி – 1 & 1/2 கப்
வெல்ல அடை
- அரிசி மாவு – 1 கப்
- வெல்லம் – 1 கப்
- தண்ணீர் – 2 கப்
- தேங்காய், பற்கள் நறுக்கியது – 4 மேஜைக்கரண்டி
- காராமணி – 1/4 கப்
- ஏலக்காய் – 1
உப்பு அடை
- அரிசி மாவு – 1 கப்
- தண்ணீர் – 2 கப்
- தேங்காய், பற்கள் நறுக்கியது – 4 மேஜைக்கரண்டி
- காராமணி – 1/4 கப்
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – 1 தேக்கரண்டி
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- பெருங்காயம் – 1 சிட்டிகை
- பச்சை மிளகாய் – 2
- கருவேப்பிலை – 1 ஆர்க்கு
காரடையான் நோன்பு அடை எப்படி செய்வது ?
- அரிசியை 2 மணிநேரம் ஊற வைக்கவும். ஒரு சுத்தமான துணியில் அரிசியை உலர்த்தவும்.
- கராமணியுடன் இதர நவதானியங்கள் (அரிசி தவிர) சாஸ்திரத்திற்காக என்னுடைய அம்மா சேர்ப்பார். அதை போல நானும் சேர்த்துள்ளேன். இதனை, நன்றாக வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
- இதனை, தண்ணீரில் ஊறவைக்கவும்.
- அரிசி வளர்ந்திருக்கும். இதனை மிக்சியில் சேர்த்து, மாவாக அரைக்கவும். இந்த அரிசி மாவை சலிக்கவும். மீதமுள்ள கப்பியை, அரிசி அரைக்கும் பொழுது சேர்த்து அரைக்கவும்.
- சலித்த மாவை அளந்து கொள்ளவும். வெல்லத்தில் தண்ணீர் மூழ்கும் வரை ஊற்றி, வெல்லம் கரையும் வரை சூடு செய்யவும்.
- வெல்லம் கரைந்ததும், ஒரு வடிகட்டியில் ஊற்றி வடி கட்டவும். பாத்திரத்தை கழுவி மறுபடியும் வெல்ல பாகை சூடு செய்யவும். கொதிக்கும் பாகில் காராமணியை சேர்க்கவும். 2 நிமிடங்கள் கொதிக்க விடவும் . இதில் மாவை சேர்க்கவும்.
- குறைந்த தீயில், கெட்டியாகும் வரை கிளறவும். தேங்காய் பற்களை சேர்த்து கிளறி, இறக்கி வைக்கவும்.
- உப்பு அடைக்கு, ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். கருவேப்பிலை, பெருங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் , உப்பு சேர்த்து கொதிக்க விடவும். காராமணியை சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விடவும். மாவை கொட்டி, மிதமான தீயில் கிளறவும்.
- தேங்காய் பற்கள் சேர்த்து, கிளறி, மாவு கெட்டியானவுடன் இறக்கி, மூடிவைக்கவும்.
- இரெண்டு (இனிப்பு மற்றும் உப்பு) மாவையும் ஆரிய பின், கைகளில் சிறிது எண்ணெய் தொட்டுக்கொண்டு பிசைந்து, சமமான உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- எண்ணெய் தடவிய இட்லி தட்டில் சிறு அடைகளாக தட்டி, நடுவில் ஒரு ஓட்டை ஈட்டி, அடுக்கவும். இட்லி பானையில் வைத்து, 5-8 நிமிடம் வரை வேகவைக்கவும்.
உருகாத வெண்ணெயுடன் கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment