இந்த வகை ஊறுகாய், கல்யாண வீடுகளில் செய்யும் ஊறுகாய். எலுமிச்சையை நான்காக கீறி, உப்பு திணித்து, ஓரிரு வரம் கழித்து செய்யும் வகை ஒன்று, இந்த சுலபமான வகை ஒன்று.
என்ன தேவை ?
எலுமிச்சை – 10
காய்ந்த சிகப்பு மிளகாய் – 20
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி (வறுத்து பொடி செய்யவும்)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
எப்படி செய்வது?
- கத்தியாலோ, அல்லது ஏதாவது கூரான கம்பியாலோ எலுமிச்சையை குத்தி, சிறிது தண்ணீர், பாதி உப்பு சேர்த்து, 2 விசில் வரை வேக விடவும்.
- ஆறியபின், சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். விதைகளை நறுக்கும் போதே நீக்கிவிடவும்.
- சிகப்பு மிளகாயை மிக்சியில் பொடியாக்கவும்.
- வாணலியை சூடாக்கி, எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, பெருங்காயம் சேர்க்கவும். வேகவைத்து நறுக்கிய எலுமிச்சை சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெந்தய பொடி சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.
- கத்தியாலோ, அல்லது ஏதாவது கூரான கம்பியாலோ எலுமிச்சையை குத்தி, சிறிது தண்ணீர், பாதி உப்பு சேர்த்து, 2 விசில் வரை வேக விடவும்.
உங்கள் கவனத்திற்கு
- கடையில் வாங்கிய மிளகாய் தூள் சேர்ப்பதனால், ஒரு எலுமிச்சைக்கு, ஒரு தேக்கரண்டி விகிதம் சேர்க்கவும்.
- பொதுவாக, எவ்வளவு மிளகாய் தூள் சேர்கிறோமோ அதே அளவு உப்பு சேர்ப்போம்.
- சரியாக உப்பு, மிளகாய் சேர்க்கவிட்டால் ஊறுகாய் கசக்கும்.
No comments:
Post a Comment