Wednesday, October 11, 2017

கம்பு அடை, KAMBU ADAI

என்ன தேவை?

கம்பு – 1/2 கப்
கடலை பருப்பு – 1/2 கப்
உளுத்தம் பருப்பு  – 1/4 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
வெங்காயம் – 1
முட்டைகோஸ்,பொடியாக நறுக்கியது  – 1 கப்
சிகப்பு மிளகாய் – 8
இஞ்சி – 1 சிறு துண்டு
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
கடுகு – 3/4 தேக்கரண்டி
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

  1. பருப்பு, கம்பு, ஒன்றாக களைந்து குறைந்தது 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. முதலில் மிக்சியில் மிளகாய், பெருங்காயம், உப்பு, இஞ்சி சேர்த்து பொடிக்கவும்.
  3. பின்பு ஊறிய பருப்பு, கம்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கம்பு அரைப்பட வேண்டும்.
  4. கடுகு பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, மாவில் சேர்த்து, முட்டைகோஸ்  சேர்த்து கலக்கவும்.
  5. தோசைக்கல்லை சூடு செயது, சிறு துளி என்னை தடவி, ஒரு கரண்டி மாவை பரப்பி, மிதமான தீயில் மூடி வேகா விடவும். திருப்பி போட்டு, சிவக்கும் வரை வேகவைத்து சுட்டு எடுக்கவும்.

உங்கள் கவனத்திற்க்கு

  • மாவை அரைத்ததுமே அடை செய்யலாம், அல்லது, ஓரிரு மணிநேரம் கழித்தும் செய்யலாம். அதற்க்கு மேலே பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment